சிங்கப்பூர் மவுண்ட்பேட்டனில், கிளாக்டன் ரோட்டில் (Clacton Road) உள்ள ஒரு வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
அதனை அடுத்து, சுமார் 30 பேர் அண்டை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்பு படை (SCDF) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!
இந்த 4 கிளாக்டன் ரோட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 5.10 மணியளவில் தகவல் கிடைத்தாக SCDF தெரிவித்துள்ளது.
தீ நன்றாக கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், மேலும் வீட்டின் கூரைமீது பரவி எரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாசக் கருவியை அணிந்த SCDF தீயணைப்பு வீரர்கள் எச்சரிக்கையுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சந்தேகத்தின் பேரில் 4 வெளிநாட்டினர் கைது..!
இந்த தீ வீட்டின் இரண்டாவது மாடியில் ஏற்பட்டதாகவும் SCDF குறிப்பிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
[Fire @ No. 4 Clacton Road]On 17 Aug at about 5.10pm, SCDF was alerted to a fire at No. 4 Clacton Road.Upon SCDF’s…
Posted by Singapore Civil Defence Force on Monday, August 17, 2020
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் இந்த விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க : தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு..!