சிங்கப்பூர் Pulau Ubin தீவில் உள்ள ஒரு மீன் பண்ணையில் தீ விபத்து!

Fire breaks out at Pulau Ubin's fish farm accommodation

பெயர் தெரியாத ஸ்டாம்ப் கான்ட்ரிபியூட்டர் (Stomp contributor) ஒருவர் ஆகஸ்ட் 1 ம் தேதி மாலை Pulau Ubin தீவில் மீன்பிடிக்கச் சென்றபோது அருகிலுள்ள மீன் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டுள்ளார்.

மீன் பண்ணை தீ பிடித்து அதிலிரிருந்து கருப்பு புகை வெளியேறும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (SCDF) ஆகஸ்ட் 1 ம் தேதி மாலை 6.55 மணியளவில் புலாவ் உபினின் வடக்கில் உள்ள கடலோர மீன் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டது.

இந்த தீயை SCDF இன் தீயணைப்புக் கப்பலில் இருந்து விரைவான நீர் மானிட்டர் மூலம் அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.