சுவா சூ காங் காபி கடை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
காலை 10.45 மணியளவில் பிளாக் 787B சுவா சூ காங் டிரைவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சட்டவிரோத குழுக்களில் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட 24 பேர் கைது!
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த நேரத்திற்குள், சுமார் 50 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சமையலறை புகை வெளியேற்றக் குழாயில் தீ ஏற்பட்டதாக SCDF கூறியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீக்கான காரணம் விசாரணையில் உள்ளது.
பொதுமக்கள் சமையலின் போது கவனிக்காமல் இருக்கவேண்டாம் என்று SCDF அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் 3ஆம் கட்டத்தில் சுற்றுலாத் தலங்களின் வருகை அனுமதி விவரம்!