லிட்டில் இந்தியாவில் திடீர் தீ விபத்து.!!

லிட்டில் இந்தியா பகுதியில் திடீர் தீ விபத்து. இரண்டு கடைகள் மற்றும் வீட்டு ஒன்றில் தீ எரிய ஆரம்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீயினால் புகைமண்டலம் வானில் சூழ்ந்து கொண்டதாக டிக்சன் சாலைக்கு அருகில் உள்ள மக்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை கூறுகையில், 14 டிக்சன் சாலை விபத்து குறித்து மதியம் சுமார் 2.50 மணிக்குள் தான் தகவல் கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் 6 நீர் பீச்சியடிக்கும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக SCDF தனது முகநூல் பக்கத்தில் மாலை 4.20 மணிக்கு பதிவில் கூறியிருந்தது.

அடுத்த 5.30 முகநூல் பதிவில், மேலும் 12 அவசர கால வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக கூறியுள்ளது.

காயங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.