செம்பவாங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

fire in Sembawang flat
Facebook/SCDF

செம்பவாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மூன்று குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிளாக் 340A செம்பவாங் க்ளோஸின் ஏழாவது மாடியில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 28) மாலை சுமார் 5 மணியளவில் தீவிபத்து பற்றி தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பியுங்கள் – சிங்கப்பூர் அவரச அறிவிப்பு

SCDF வருவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

புகையை உள்ளிழுத்த மூன்று பேர், KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (KKH) அழைத்துச் செல்லப்பட்டனர் என்று முகநூல் பதிவில் SCDF கூறியது.

மற்ற இரண்டு குடியிருப்பாளர்கள் மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல SCDF மறுத்துவிட்டனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் இந்தியரை 9 நாட்களாக காணவில்லை – தகவல் தேடும் போலீஸ்