சிங்கப்பூரில் ஃபயர்பிளை விமான சேவை மீண்டும் தொடக்கம்…

மலேசியாவில் மிக குறைந்த டிக்கெட் கட்டணங்களை வசூலிக்கும் ஃபயர்பிளை விமான நிறுவனம் சிங்கப்பூருக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே வான்வழி போக்குவரத்து நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தது. இதனை அடுத்து அதற்கான தீர்வுகள் அண்மையில் ஏற்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வான்வெளி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்கான முதல் விமான சேவை சுபாங் விமான நிலையத்தில் இருந்து 21 ஏப்ரல் அன்று காலை 11 மணியளவில் புறப்பட்டு சிலேத்தார் விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் மலேசியா போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பயணம் செய்தார். சிலேத்தார் விமான நிலையத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கான் பூன் வான் மலேசியா போக்குவரத்து அமைச்சர் அவர்களை சிறப்புடன் வரவேற்றார்.