MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்

foreigner MRT train misbehave jailed
Photo: TODAY

MRT ரயிலில், ​​மகேஸ்வரன் விசுரநாதம் என்பவர் பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரை தொல்லை செய்து இரண்டு முறை தனது பிறப்புறுப்பை வெளிக்காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரயிலை விட்டு வெளியேறி பின்னரும், அதாவது எஸ்கலேட்டரில் ஏறியதும், அந்த பெண்ணை பார்த்து அவர் ஆபாசமான முறையில் சைகை செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்

அந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், தனது பிறப்புறுப்பை வெளிப்படுத்தியதற்காகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் மலேசியரான மகேஸ்வரன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) மகேஸ்வரனுக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் S$500 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 2 ஆம் தேதி காலை 7.50 மணியளவில், வேலையை முடித்துவிட்டு ராஃபிள்ஸ் பிளேஸ் MRT நிலையத்தில் ரயிலில் ஏறியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!