MRT ரயிலில், மகேஸ்வரன் விசுரநாதம் என்பவர் பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரை தொல்லை செய்து இரண்டு முறை தனது பிறப்புறுப்பை வெளிக்காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ரயிலை விட்டு வெளியேறி பின்னரும், அதாவது எஸ்கலேட்டரில் ஏறியதும், அந்த பெண்ணை பார்த்து அவர் ஆபாசமான முறையில் சைகை செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், தனது பிறப்புறுப்பை வெளிப்படுத்தியதற்காகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் மலேசியரான மகேஸ்வரன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) மகேஸ்வரனுக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் S$500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அவர் மீது இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 2 ஆம் தேதி காலை 7.50 மணியளவில், வேலையை முடித்துவிட்டு ராஃபிள்ஸ் பிளேஸ் MRT நிலையத்தில் ரயிலில் ஏறியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.