சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்…!

From Singapore to Lucknow, with love

லக்னோவை சேர்ந்த இளைஞர் மோஹித் சிங், சிங்கப்பூரில் பிறந்த ஜாக்குலின் ஓவியோங் மணப்பெண்ணை இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் இந்திய நாட்டில் உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் ஒரு ஓட்டலில் நடைபெற்றது.

இந்திய முறைப்படி ஆடைகள் அணிந்து நடைபெற்ற இந்த திருமணத்தில் சிங்கப்பூர் மணப்பெண் சார்பாக திரளானோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்திய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக மணப்பெண்ணின் குடும்பத்தினர் கூறி உற்சாகமடைந்தனர்.