கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டிற்கு, “கார்டன்ஸ் பை தி பே” திறப்பு – முதல் நாளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

Photos via @xiaxue/IG and @meijuann_/IG

கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டிற்கு, “கார்டன்ஸ் பை தி பே” கடந்த டிசம்பர் 3 அன்று கதவுகளைத் திறந்தது.

இதனை அடுத்து, அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனதாகவும் வருகையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை

மேலும், அலங்கரிப்புகளுடன் புகைப்படங்களை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டிற்கு சென்ற ஒருவர் தொடர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை வெளியிட்டார். அதில், “OMG so crowded what Omicron LOL” என்ற தலைப்புடன் கூடிய மக்கள் கூட்டத்தை காணொளி எடுத்து பகிர்ந்துள்ளார்.

இருப்பினும்கூட, அவர் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் ஒளி காட்சிகளை ரசித்து மகிழ்ந்தார்.

இதுபற்றி மற்றொருவர், தொடக்க நாளில் அரங்கம் எவ்வளவு கூட்டமாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அரங்கிற்குள் நுழைவதற்கோ அல்லது அலங்காரங்களை அணுகுவதற்கோ நீண்ட வரிசைகளும் சம்பவ இடத்தில் காணப்பட்டன.

எதுவாயினும், அலங்காரங்கள் மற்றும் ஒளி காட்சிகளை பொதுமக்கள் பார்த்து ரசித்து, அதனுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து சிவகங்கைக்கு வந்த 23 பேர் – கடும் வீட்டு கண்காணிப்பு