வெளிநாடுகளில் வசிக்கும் 101 சிங்கப்பூர்களால் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) கணிப்பொறி செயலாக்க அமைப்பில்கோளாறு காரணமாக அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடுமையான சவால் – பிரித்தம் சிங்..!
பாதிக்கப்பட்ட அந்த நபர்களுடன் தொடர்புகொள்ள ஆணையம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக ICA தெரிவித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு ICA_IC_Unit@ica.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் கமலா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!