சிங்கப்பூரில் வாக்களிப்பு தினமான இன்று 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மதியம் 12 மணிக்கு, பிரதமர் லீ சியென் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங், அலெக்ஸாண்ட்ரா தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தனர்.
இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த மேலும் சுமார் 30 இடங்களின் பட்டியல்..!
அங்கு வாக்காளர்களுடன் திரு லீ மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரிசையில் இணைந்துகொண்டனர்.
காலை 10 மணி நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் துறை (ELD) குறிப்பிட்டுள்ளது.
மேலும், 840,000 வாக்காளர்கள் (பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 31%) மதியம் 12 மணி வரை சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் துறை குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு தினம்: வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் லீ..!
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter – https://twitter.com/tamilmicsetsg
??Telegram – https://t.me/tamilmicsetsg
?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg