சட்டவிரோத பாலியல் சேவை… 13 பெண்கள் அதிரடி கைது

geylang-anti-vice-operations
SPF

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பாலியல் சேவை வழங்கியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் 21 முதல் 73 வயதுக்குட்பட்ட 19 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி சோதனை கடந்த செப். 25 முதல் அக்டோபர் 8 வரை நடந்தது. பல்வேறு குற்றங்களுக்காக அவர்களிடம் விசாரணையும் தொடர்கிறது.

லிட்டில் இந்தியாவில் மது அருந்தத் தடை.. மீறினால் அபராதம், சிறை

கெயிலாங் லோராங்ஸில் சட்டவிரோதமான சூதாட்டம், பாலியல் சேவைகள், சட்டவிரோத பாலியல் புத்துணவு மருந்து விற்பனை மற்றும் சட்டவிரோத பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக ICA மற்றும் MOM கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதில் Lorong 23 Geylang இல் உள்ள தொழில்துறை பிரிவில் போலீசார் சோதனை நடத்தினர்.

பிடிபட்ட 32 நபர்கள் மற்றும் இரண்டு மசாஜ் நிறுவனங்களிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சோதனையில் சிக்கிய ஆடவர்… தப்பிக்க முயன்று 4 அதிகாரிகளை ஆயுதம் கொண்டு தாக்கியதாக குற்றச்சாட்டு – மூவர் மருத்துவமனையில்