லிப்டுக்குள் சிறுமியின் வாயைப் பொத்தி சில்மிஷம் செய்த 57 வயது நபர்! – சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை!

girl child abused by FATHER singapore court
7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 57 வயதான ரவிச்சந்திரன் சுப்ரமணியத்திற்கு புதன்கிழமை (நவம்பர் 23) நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தடியடிக்குப் பதிலாக கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த ரவிச்சந்திரன் பகுதிநேர துப்புரவுத் தொழிலாளி என்பது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி தின்பண்டம் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
சிறுமி தனியாக நடந்து செல்வதைக் கவனித்த ரவிச்சந்திரன்,சிறுமியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு கடையிலிருந்து திரும்பியதும் அவனைச் சந்திக்கும்படி கூறினான்.ஆனால்,சிறுமி தின்பண்டத்தை வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக லிப்ட் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள்.
சிறுமியைப் பின்தொடர்ந்தவன் அவள் கையைப்பிடித்து இழுத்து லிப்டுக்குள் தகாத முறையில் நடந்து கொண்டான்.சிறுமியின் வாயைப் பொத்திக்கொண்டு இழிவாக நடந்து கொண்டான்.லிப்ட் சிறுமியின் வீடு அமைந்துள்ள தளத்திற்கு வந்து நின்றதும் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடினாள்.

கதவைத் திறந்த சிறுமியின் தாய் ரவிச்சந்திரன் தனது மகளைப் பின்தொடர்ந்து வந்திருப்பதைக் கவனித்தாள்.அவள் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்து புகாரளித்தார்.அன்றே,அந்த நபர் கைது செய்யப்பட்டார்.மதுபோதையில் சிறுமியை துன்புறுத்தியிருப்பது தெரிய வந்த நிலையில் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது