சிங்கப்பூரில் 71வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26, (ஞாயிற்றுகிழமை) காலை 9.00 மணியளவில் இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்படும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் (High commission of India) அறிவிப்பு செய்திருந்தது.
இதையும் படிங்க : இந்தியாவின் 71வது குடியரசு தினம்; சிங்கப்பூரில் வெகு விமர்சையாக நடைபெற்ற கொண்டாட்டம்…!
இந்நிலையில், இந்த குடியரசு தின விழாவில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1200 உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா – முக்கிய விதிமுறைகள்…!
இதில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு ஜாவத் அஷ்ரஃப், இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மேலும், இந்த விழாவில் 7 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.