குடிபோதையில் தம்பதியர் பொது இடத்தில் உறக்கம்; பெண்ணை மட்டும் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

குடிபோதையில் தம்பதியர் பொது இடத்தில் தூங்குவதைக் கண்ட திருச்செல்வம் மணியம் என்ற கொடூரன், அதில் பெண்ணை மட்டும் வேறொரு இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து, 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் விழித்து பார்த்த போது திருச்செல்வம் மணியம் என்ற குற்றவாளி அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து, அந்த பெண் போலீசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

40 வயதான இந்த சிங்கப்பூர் குற்றவாளிக்கு திங்கள்கிழமை அன்று (செப்டம்பர் 2) 6½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 பெரம்படியும் விதிக்கப்பட்டது.