இந்தியாவின் 73வது சுதந்திர தினம் நேற்று(ஆக.15) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூரில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஹை கமிஷ்னர் ஜாவெத், அஹ்ரஃப் தேசியக் கொடி ஏற்றி, அதிபரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். இந்த நிகழ்வில் அதிக அளவிலான இந்தியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.