‘சிங்கப்பூரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ – இந்திய பிரதமர் மோடி

Indian PM Narendra Modi
Indian PM Narendra Modi

இந்தியாவின் 73வது சுதந்திர தினம், கடந்த ஆகஸ்ட் 15 தேதி கொண்டாடப்பட்டது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார்.

பிறகு சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, “சிங்கப்பூர் அரசு நமது Rupay கார்டை ஏற்றுக் கொண்டதை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம்.

விரைவில், நமது ரூபே கார்டுகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.