சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபையின் (SICCI) 95 வது ஆண்டு விழா மற்றும் தொழில்முனைவர் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை பிரதமர் திரு. ஹெங் கலந்து கொண்டார்.
இதில் இளம் தொழில்முனைவர் விருது, வளர்ந்துவரும் தொழில் முனைவர் விருது, அனுபவமிக்க தொழில்முனைவர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என மொத்தம் எட்டு விருதுகள் 10 பேருக்கு வழங்கப்பட்டன.s
சிங்கப்பூரின் 200 ஆண்டை நினைவுகூரும் அதே வேளையில், SICCI தனது நூற்றாண்டு விழாவை வேகமாக நெருங்கி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் வணிக வாய்ப்புகளை நிறுவுவதில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளது.
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அமராலி ஆர் ஜுமாபோய் உட்பட, சிறந்த SICCI தொழில்முனைவோர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை ஹெங் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மசோதாவிற்கு அமராலி பொறுப்பேற்றது மட்டுமல்லாமல், 1992 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு சிங்கப்பூரின் முதல் தூதுக்குழு உட்பட ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள 22 நாடுகளுக்கு வணிக பிரதிநிதிகளை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் SICCI மற்றும் சிங்கப்பூர் இந்திய வணிக சமூகம் தொடர்ந்து வெற்றிபெற விரும்புவதாக ஹெங் தெரிவித்தார்.