இரண்டு நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.
இந்த பயணத்தில், ராஜ்நாத் சிங் சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள செம்பவாங் விமானத் தளத்தை பார்வையிட்டார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் என்ஜி எங் ஹென் உடன் ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்த உரையாடல்களை மேற்கொண்டனர்.
மேலும், கிளிஃபோர்ட் பியரில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி தகட்டில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். அங்கு காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி 1948இல் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.