Breaking: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குறையும் தனிமை காலம்..!

(GETTY IMAGES)

கோவிட்-19 பாசிடிவ் முடிவை கொண்ட முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அதிகபட்ச தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட உள்ளது.

ஓமிக்ரான் வகையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகிய கிருமித்தொற்று மட்டுமே உள்ளதாகவும், அதனால் தனிமை காலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு எளிமையாகும் சோதனை கட்டுப்பாடுகள்!

இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கான அதிகபட்ச தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக இருக்கும்.

இந்த அறிவிப்பு, இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) மெய்நிகர் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் வெளியானது.

“சிங்கப்பூரில் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்” – வேலையிடத்தில் காயமடைவதை தடுக்க புதிய முயற்சி