தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா – கட்டண விவரம்

சிங்கப்பூரில் தீப ஒளித் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இஸ்தானா கதவுகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இஸ்தானா பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேலையில் இருந்த ஊழியர் சுப்ரமணியை கடுமையாக தாக்கிய ஓட்டுநர் – போலீஸ் விசாரணை

சிறப்பு நிகழ்ச்சிகள்

Bowen மேல்நிலைப் பள்ளி, Punggol மேல்நிலைப் பள்ளி, Clementi Town Secondary School மற்றும் Nanyang Academy of Fine Arts’ School of Young Talents ஆகிய மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Xinmin மேல்நிலைப் பள்ளி மற்றும் CHIJ கட்டோங் கான்வென்ட்டின் நேரடி இசைக்குழு நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டு கழிக்க முடியும்.

இந்த நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணம்

சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு இலவசம்.

மற்ற அனைத்து பார்வையாளர்களும் நுழைவுக் கட்டணமாக $2 செலுத்த வேண்டும். PayNow வழியாக பணமில்லா கட்டணம் செலுத்தும் முறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை – நவ. மாதம் வரை கூட நீடிக்கலாம்!