சிங்கப்பூர் – இந்தியா விமான சேவை தற்காலிக நிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ்…

சிங்கப்பூர் – இந்தியா விமான சேவை தற்காலிக நிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ்.

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சிங்கப்பூர் – இந்தியா இடையிலான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த சேவைகள் நிறுத்தம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இது குறித்து சாங்கி விமான நிலையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்து முகவரையோ அல்லது நேரடியாக விமான நிறுவனத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பிரச்சனையில் சிக்கியிருப்பதாய் தகவல்கள் வெளியாகி வந்தன. நிறுவனத்தின் கடன் 1.6 பில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் போட்டியால் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக குறைந்து இருக்கிறது.

பன்னாட்டு அளவில் 13 இடங்களுக்கான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சென்ற மாதம் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.