ஜுவல் சாங்கி ஏர்போர்ட் பார்வையாளர்கள் மற்றும் பயணிகளுக்காக இன்று அதிகார்வப்பூர்வமாக திறக்கப்பட்டது.
ஜுவல் சாங்கி ஏர்போர்ட் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் இன்று (17-04-2019) திறக்கப்பட்டது. அதன் காரணமாக மக்கள் கூட்டம் இன்று 10 மணிக்கு மேல் அதிகம் வருகை தர வாய்ப்பு உள்ளதாக சாங்கி ஏர்போர்ட் அறிவித்திருந்தது. இது டெர்மினல் ஒன்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள உலகத்தர சுற்றுலாத்தளங்களின் வரிசையில் ஜுவல் சாங்கி கூடுதலாகச் சேர்க்கப்படும் மதிப்புமிக்க அம்சம், என்று ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கும் சாங்கி விமான நிலையக் குழுமத்திற்கும் தலைவராக உள்ள திரு லீ சியாவ் ஹியாங் தெரிவித்தார்.
50 மீட்டர் நீள தொங்குபாலம், 40 மீட்டர் உயரமான உள்புற அருவி, 2,000 க்கும் அதிகமான மரங்களையும் 100,000 புதர்களையும் கொண்டுள்ள ஐந்து மாடித் தோட்டம் உள்ளிட்டவை ஜுவலின் சிறப்பம்சங்கள்.
மேலும், 135,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஜுவலில் 280க்கும் மேற்பட்ட கடைகள், ஒரு ஹோட்டல், விளையாட்டு வசதிகள் ஆகியவையும் உள்ளன.
Source : Channel News Asia