ஜூரோங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் சீன தொழிலாளி இருவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (21-06-2019) ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான வீரியமாக எறியக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், இந்த ராட்சச தீ விபத்துக்கு காரணமாக அமைந்ததாக சிங்கப்பூர் சிவில் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
இரண்டு கால்பந்து மைதான அளவு பற்றி எறிந்த நெருப்பை இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே சடலமாக கண்டு எடுக்கப்பட்டார், மேலும் இருவர் காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.