கந்தர்வக் குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே. யேசுதாஸ் சிங்கப்பூர் வருகை!

K.J. Yesudas in Singapore

சிங்கப்பூரில் “The Voice of Legends” சாதனையாளர்களின் ஒருமித்த சங்கமம் மற்றும் அவர்களின் இனிமையான குரலில் ஒரு இசை கச்சேரி கோலாகல கொண்டாட்டம் வரும் ஜூலை 19 ஆம் தேதி Suntec City அரங்கில் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் தனி பெரும் சாதனை படைத்த சின்னகுயில் பாடகி சித்ரா அம்மா, பட்டையை கிளப்பும் பாடல்களுக்கு சொந்தகாரர் S.B. பாலசுப்ரமணியம் மற்றும் பலர், இந்த நேரடி கச்சேரியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர இருக்கின்றனர். மேலும், அவர்களின் லைவ் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சிக்காக இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர், சிறந்த கர்நாடக இசை கலைஞரும், மேலும் தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அன்போடு அழைக்கப்படும் திரு. கே. ஜே. யேசுதாஸ் அவர்கள் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.

தகவல் : திரு. கார்த்திக், Noise and Grains முகநூல் பக்கம்.