சிங்கப்பூர், இஸ்தானாவில் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா இரவு உணவில் சிங்கப்பூர் பிரதமர் லீயுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச எஸ்.எம்.தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் லீ கூறினார்.
மேலும், ஆபிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் கென்யாவும் ஒன்றாகும். கென்யாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரிப்பதற்காக இந்த ஆண்டு அவர்களுடன் ஃபின்டெக் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், கடந்த ஆண்டு இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்திலும் நாங்கள் கையெழுத்திட்டோம். எங்கள் நாடுகளுக்கு இடையில் அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை ஊக்குவிக்க மேலும் ஒன்றாகச் செய்ய எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் லீ அவர்கள் கூறினார்.