சிங்கப்பூர் லக்கி பிளாசா விபத்தில் சிக்கிய அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதில் இரு உடன்பிறப்புகளும் அடங்குவர், துரதிஷ்டவசமாக அதில் ஒரு பெண்மணி உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
படிக்க : லக்கி பிளாசா ஷாப்பிங் சென்டரில் கார் தடுப்பை மீறி பாய்ந்து விபத்து; இருவர் பலி..!
இந்த விபத்தில் சிக்கிய ஆறு பேரும் சிங்கப்பூரில் பணிபுரியும் வீட்டு உதவியாளர்கள், அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆறு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பது கூடுதல் தகவல்.
மேலும், இறந்த இருவர் மற்றும் மற்ற நான்கு பாதிக்கப்பட்டவர்களும், இப்போது டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ளனர்.
இறந்த இரண்டு பெண்கள் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளனர், மேலும் காயமடைந்தவர்களில் சிலர் குறைந்தது 10 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.