மகாத்மா காந்தியின் அஸ்தி சிங்கப்பூரில் எங்கு கரைக்கப்பட்டது தெரியுமா?

சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் கமிஷன் சார்பாக, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

சிங்கப்பூரில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட கிளிஃபோர்ட் பையர் என்ற இடத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

1948ம் ஆண்டு மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இந்த கிளிஃபோர்ட் பையர் எனும் இடத்தில் தான் கரைக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் சென்றிருந்த போது, இந்த நினைவுச் சின்னத்தை முதன் முதலில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.