சிங்கப்பூரில் பணிப்பெண் ஒருவர் எடுத்து வெளியிட்ட டிக்டாக் வீடியோ காரணமாக தற்போது அவர் சிறையில் நாட்களை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தனது முதலாளியின் நான்கு வயது மகன் உடைகளை மாற்றும் போது, அவரின் பின்புறம் மற்றும் அந்தரங்க பாகங்களை அம்பலப்படுத்தி பணிப்பெண் வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல், பின்னர் அந்த வீடியோவை டிக்டாக்கிலும் பதிவேற்றியுள்ளார்.
மற்றவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தியது மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
25 வயதான ரைக் குஸ்னுல் கொட்டிமா என்ற அந்த பணிப்பெண்ணுக்கு மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறை தண்டனை இன்று செவ்வாய்கிழமை (ஜூலை 19) விதிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட தலைப்புடன் வீடியோவை பணிப்பெண் தனது TikTok கணக்கில் பதிவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் மூலம் பணிப்பெண்கள் சிக்குவது இது முதல் முறை அல்ல.
Related
நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்
தொற்றுநோய்: சிங்கப்பூரில் உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை – MOH அளித்த தகவல்