சிங்கப்பூரில் இருந்து போலி பெயரில் தமிழ்நாடு வந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு அவர் வந்தார்.
“என்ன பெத்த அம்மாவையே தப்பா பேசுவியா..” – கடை உரிமையாளரை பொளந்த மகன் (வீடியோ)
இதனை அடுத்து பயணிகளை வழக்கம்போல அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 42 வயதுமிக்க வீரமுத்து என்ற ஊழியரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வீரமுத்து, சலீம் என்ற பொய்யான பெயர் கொண்ட பாஸ்போர்ட் பெற்று அதன் மூலம் பயணித்து வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து வீரமுத்துவை போலீசிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் உணவு, இறைச்சிகளை இறக்குமதி செய்த கடைக்கு அபராதம்