கொடூரமாக தீப்பிடித்து எரிந்த கார் – ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி மரணம்!

man-dies-car-fire-bukit-panjang
GFollowsAll / Telegram

புக்கிட் பாஞ்சாங் கார் நிறுத்துமிடத்தில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆடவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி அன்று அதிகாலை Petir சாலையில் நடந்தது.

பார்க்கிங்கில் உள்ள ஒரு கார் கடுமையாக தீப்பிடித்து பற்றி எரிவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மூலம் காண முடிந்தது.

சிங்கப்பூரில் காணாமல் போன திரு ஹாஷிம் பின் அஹ்மத்… தேடிவரும் போலீசார்

அன்று அதிகாலை 4 மணியளவில் பிளாக் 216 Petir சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

அந்த கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. அதில் தீக்காயங்களுக்கு ஆளான ஆண் ஓட்டுநர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்த நபர் உயிரிழந்ததாக என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மிகப்பெரிய அளவில் அமையும் சாங்கி விமான நிலையத்தில் Terminal 5 – சிங்கப்பூரர்களுக்கு அதிகரிக்க போகும் வேலைவாய்ப்புகள்