பாண்டன் ஆற்றில் விழுந்த நபரைத் தேடும் பணிகள் நிறுத்தம் – நான்கரை மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை !

pandan reservoir

பாண்டன் ஆற்றில் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் பணிகள் நான்கரை மணிநேரத்திற்குப் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6:50 மணியளவில், Blk 291E புக்கிட் பாடோக் ஸ்ட்ரீட் 24க்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்தவரை மீட்க தங்களுக்கு அழைப்பு வந்ததாக SCDF உறுதிப்படுத்தியுள்ளது.

கால் தவறி பாண்டன் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரைத் தேட மூன்று தீயணைப்பு வாகனங்கள், ஒரு ஆம்புலன்ஸ், பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு வந்துள்ளது.

பின்னர் SCDF, Blk 408 பாண்டன் தோட்டத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்று அங்கு அவர்கள் மேலோட்டமாக கண்ணாலும் படகில் ஏறி உள்சென்றும் தேடியுள்ளனர்.

அருகிலுள்ள குடியிருப்பாளரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பாண்டன் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள மேற்கு கடற்கரை சாலையில் SCDF வாகனங்கள் காணப்பட்டதாக தெரிகிறது. சுமார் நான்கரை மணிநேரத்திற்குப் பிறகு அந்த நபரின் அடையாளங்கள் எதுவும் இல்லாததால் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது. பின்னர் காலை 11:30 மணியளவில், SCDF வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.