கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரில் இறந்து கிடந்த 39 வயது ஆடவர்

Photo Credit: Lianhe Wanbao

பிளாக் 216 புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 21இல் உள்ள திறந்தவெளி கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 39 வயதுடைய ஆடவர் அசைவற்று கிடந்தார்.

அதன் பின்னர், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (நவ. 24) காலை சுமார் 10:40 மணிக்குள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ்!

அன்று காலை 10:41 மணிக்கு இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

மேலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த செய்தி கிடைத்ததும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலர், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக வான்பாவோ தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த மரணத்தில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு