ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 24 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
920 ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கார்பார்க் C1 அருகே மீட்பு உதவி வேண்டி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) அழைப்பு வந்ததாக அது கூறியுள்ளது.
தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உடும்பு கறி – மண்பானையில் “உடும்பு கறி சோறு” வைரல்
இதனை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, தண்ணீரில் ஆடவரின் உடல் மிதந்ததை கண்டனர். பின்னர் SCDF வீரர்கள் கடலில் இருந்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், அந்த 24 வயது இளைஞர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
அந்த நபர் நீரில் மூழ்கிய இறந்திருக்கலாம் என நம்பப்படுவாதாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் லாரி மோதி ஊழியர் மரணம் – தொடரும் உயிரிழப்புகள்