அப்பர் புக்கிட் திமாவில் உள்ள பால் பண்ணை இயற்கை பூங்காவில் நேற்று முன்தினம் ஆடவர் ஒருவர் மரத்தில் இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
அன்று காலை 7.20 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக 8வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
அப்பர் தாம்சன் சாலையில் உள்ள செல்லப் பிராணிக் கடையில் தீ..!
அதே போல, காலை 7.30 மணியளவில் டைரி ஃபார்ம் ஃப்ளைஓவர் அருகே, டைரி ஃபார்ம் சாலையில் உதவி வேண்டி சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அந்த ஆடவர் சம்பவ இடத்தில் இறந்ததாக அங்கு வந்த SCDF துணை மருத்துவர் உறுதிப்படுத்தினார். அவருக்கு வயது 31 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைரி ஃபார்ம் கார் நிறுத்தத்திற்கு வெளியே உள்ள பாதை சுற்றி வளைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டது.
மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.