மது போதையில் இருந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒருவருக்கு அடி விழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சல்வதுரி அஹ்பியா மணியம் என்ற ஆடவர் மது அருந்திக்கொண்டிருந்த 66 வயதான திரு வூ ஜிட் குயென் என்பவரை குத்தினார்.

இதில் கீழே விழுந்தவர் திரு வூக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், 53 வயதான சல்வதுரி தானாக முன்வந்து கடும் காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த திங்களன்று, அவருக்கு மூன்று ஆண்டுகள், ஆறு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திரு வூ அருகில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடைக்கு டிக்கெட் வாங்க சென்றுள்ளார், ஆனால் நீண்ட வரிசையைக் கவனித்த அவர் பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என எண்ணி திரும்பினார்.

பின்னர் அவர் மெக்டொனால்டின் கடைக்கு வெளியே இரண்டு நபர்கள் அடங்கிய குழு மது அருந்திக்கொண்டு இருப்பதை கண்டார்.

அந்த குழுவில் அவருக்கு தெரிந்தவர் சிலர் இருந்ததை அடையாளம் கண்டு வூ அவர்களுடன் சேர்ந்தார்.

இதில் இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் வூ தாக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.