சிங்கப்பூர் கொடிக்கு தீ வைத்த ஆடவருக்கு 16 வாரம் சிறை..!

Pic: citywireasia

சிங்கப்பூரில் கொடிக்கு தீ வைத்த ஆடவருக்கு 16 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேசிய தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், மதுபோதையில் இருந்த ஒருவர், தனது வீட்டிற்கு வெளியே தொங்கவிடப்பட்ட சிங்கப்பூர் கொடிக்கு தீ வைத்தார்.

வீட்டில் வெளிப்புற சுவர்களில் தொங்கவிடப்பட்ட கொடியைக் கவனித்த அவர், சிகரெட்டைக் கொண்டு கொடிக்குத் தீ வைத்துள்ளார்.

தீயால் எரிந்த கொடியின் பகுதிகள் கீழே விழுந்ததில், கீழ் தளங்களில் கட்டப்பட்டிருந்த மேலும் 7 கொடிகளில் தீப்பற்றியது.

இதையும் படிங்க: “மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்குவதற்கான பணி என்றும் முடிவடைவதில்லை”- அமைச்சர் லாரன்ஸ் வோங்..!

இதில் 26 வயதான எல்சன் ஓங் யோங் லியாங், சொத்துக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் தீ ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் கொடியை எரித்த குற்றத்திற்காக ஓங்கிற்கு 16 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Today

அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதை விட இரண்டு மாதம் குறைவாகவே ஓங்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg