சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர்… 24 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்

(Photo: TODAY)

சிங்கப்பூரில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதற்காக, 18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் மீது இன்று ஜனவரி 21ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கான்பெர்ரா வியூ மற்றும் செம்பவாங் விஸ்டாவில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதாக கார் பகிர்வு நிறுவனத்திடமிருந்து ஜனவரி 19 அன்று காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

சிங்கப்பூர் ஆற்றில் சடலமாக மிதந்த மலேசிய இளம்பெண்: மகளை கடைசியாக பார்க்க சிங்கப்பூர் வர முடியாமல் தவிக்கும் பெற்றோர்

தரை விசாரணைகள் மூலமாகவும், காவல்துறை கேமராக்களின் உதவியுடனும், உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவர்களின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

அதனை அடுத்து புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.

சிங்கப்பூரில் வேலையிடத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்!