நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் ஒன்றான, சென்னை ஐ.ஐ.டி.,யின் வைர விழா மற்றும் 56-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இதில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில், இன்று காலை 9 மணிக்கு, பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் வரவுள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.