சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 304 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் MOH குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் 36,299 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறை மற்றும் பிரம்படி..!
மேலும் 189 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் MOH தெரிவித்துள்ளது.
மேலும் 6,109 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.
இரண்டு புதிய நோய் பரவல் குழுமங்களை MOH அறிவித்துள்ளது. அவை,
- 51 Pioneer Sector 1 at Keppel Shipyard
- 52 Tech Park Crescent தங்கும் விடுதி
இதையும் படிங்க : உணவகங்களில் மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அகற்ற அனுமதி இல்லை – MOH..!