சிங்கப்பூரில் உள்ள ஒரு கடையில் இருந்து குரங்கு ஒன்று ரொட்டியை எடுத்து சென்றதாக Lianhe Wanbao தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை பிளாக் 417 ஃபெர்ன்வேல் (Fernvale) இணைப்பில் உள்ள Sheng Siong கடையொன்றிலிருந்து ரொட்டிப் பையைத் திருடும் போது கேமராவில் அது பிடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!
நேரில் கண்ட ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த காணொளி காட்சிகள் மறுநாள் பேஸ்புக்கில் பகிரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், குரங்கு ரொட்டியை எடுத்துக்கொண்டு மரத்துக்கு தாவிச் சென்று உண்பது பதிவாகியுள்ளது.
Hello Police
Posted by Kuanyewism on Saturday, August 1, 2020
அடையாளம் கூறப்படாத ஊழியர் ஒருவர் சீன நாளிதழுக்கு பேட்டியளித்தபோது, குரங்குகளின் இந்த திருட்டு சம்பவம் முதல் முறை அல்ல என்று குறிப்பிட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இறுதி முதல், கடையில் இருந்து சுமார் ஆறு சந்தர்ப்பங்களில் ரொட்டியை குரங்குகள் திருடிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும், அவரின் வேலையையும் காப்பாற்ற தயார்; இங் சீ மெங்.!