பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் என்று நோய்த்தொற்றுக்கான அமைச்சகங்களின் பணிக்குழு இணைத் தலைவர் திரு லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்துள்ளார்.
இதில் கட்டுமான பணிகள் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்றும் திரு வோங் கூறியுள்ளார், மேலும் தேவையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை – MOM
இதில் தங்களது தனிமைப்படுத்தல் காலக்கெடுவை முடிக்கும் ஊழியர்களின் இறுதிக் குழுவைத் தவிர, நாளை வெள்ளிக்கிழமைக்குள் சிங்கப்பூர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சோதனை முடிக்கப்பட்டு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் இரண்டு வாரங்களில், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் தருவாயில் உள்ள ஊழியர்கள் மீண்டும் சோதிக்கப்பட உள்ளதால், சிங்கப்பூரில் அதிக கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை எதிர்பார்க்கலாம், என்றார்.
மேலும், தங்களுடைய வேலைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு, கூடுதலாக 2 வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவச் சோதனை நடத்தப்படும் என்றும் திரு வோங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்