புக்கிட் பஞ்சாங்கில், ஆமை ஒன்று சாலையைக் கடக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உதவும் காணொளி வைரல் ஆகி வருகிறது.
சாலையில் சென்ற கார் மூலம் பதிவான அந்த காணொளியில், சாலையின் குறுக்கே ஆமை மெதுவாக செல்லும் காட்சியை காணமுடிகிறது.
சுமார் S$90,000க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத பாலியல் தொடர்பான மருந்துகள் பறிமுதல்!
வாகனங்களில் சிக்கிவிட கூடாது என்பதற்காக அந்த ஆடவர் அது சாலையை கடக்க உதவி புரிவதாக தெரிகிறது.
காணொளியில், தனது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிலிருந்து அவர், ஆமை நோக்கி நடந்து செல்வதையும், சாலையில் செல்லும் மற்றொரு காரை நிறுத்த சமிக்ஞை செய்வதையும் காணலாம்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒரு பொருளைப் பயன்படுத்தி ஆமை விரைவாக செல்ல சிறிய உந்துதலைக் கொடுக்கிறார், இதனால் அது சாலையை விரைவாகக் கடக்கிறது.
எல்லாம் ஒரு உயிர் தானே, என்ற அவரின் பொதுநல பண்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா-சிங்கப்பூர் இடையே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமானம் – முன்பதிவு தொடக்கம்!