சிங்கப்பூரில் காணாமல் போனவர் மரணம் – ஆடவருக்கு மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என கைது

murder-missing man arrest 50 yeras old man

சிங்கப்பூரில் காணாமல் போன 27 வயது பெண்ணின் மரணத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

பீச் ரோட்டில் உள்ள கடையில் கடந்த நவம்பர் 13 அன்று இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மனைவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாறி மாறி நாசம்… ஆன்லைனில் செயல்பட்ட குழு – 4 பேருக்கு சிறை

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தவுடன், 27 வயது பெண்ணை அந்த வளாகத்திற்குள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திலேயே அவரின் இறப்பும் உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.

இறந்த பெண் குறித்து கடந்த நவம்பர் 10, அன்று காணாமல் போனதாக புகார் வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 50 வயதுடைய நபரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அதாவது, நேற்று நவம்பர் 16, மலேசியா போலீஸ் கைது வாரண்ட் பிறப்பித்த பிறகு அவர் ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

அவர் மீது நாளை நவம்பர் 18, அன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படும். கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வரும் நாட்களின் மழை அளவு குறைவாக இருக்கும்