மரினா பே மிதக்கும் மேடை வெடித்து சிதறும் என பதிவிட்ட நபர் அதிரடி கைது

marina-bay-countdown 2024

தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த மரினா பே மிதக்கும் மேடையில் (The Float @ Marina Bay) ஒரு பொருள் வெடித்துச் சிதறும் என்று பொய்யான தகவலைப் பரப்பிய சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று அவர் அந்த அதிர்ச்சியான ட்வீட்டைப் (Tweet) பதிவு செய்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

அந்த ஒரு வார்த்தை சொன்னதும் கடுப்பான பெண்… பெண்ணை இப்படி சொல்லலாமா; MRT ரயிலில் நடந்த வாக்குவாதம்

மேலும், மரினா பே மிதக்கும் மேடையில் 27வது வரிசையில் உள்ள இருக்கையின் கீழ் அந்த பொருள் வெடிக்கும் என்றும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்த சமூக ஊடகப் பதிவு குறித்து அன்றைய தினம் இரவு 7.10 மணியளவில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சந்தேக நபரின் அடையாளத்தை கண்டறிந்த அதிகாரிகள், குற்றம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் இரண்டு கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்! கணவனின் செயல்..?! தமிழகத்தில் உயிரை மாய்த்த மனைவி!