சிங்கப்பூரில் “இந்தியர்களுக்கான இடம் எப்போதும் பாதுகாக்கப்படும்” அமைச்சர் சண்முகம்.!

Pic: Twitter/K.Shanmugam SC

சிங்கப்பூர் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை தாங்குகிறார். தமது அணியைச் சேர்ந்த டெரிக் கோவுடன் அவர் ஈசூன் ரிங் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவம் பெறுவதை மக்கள் செயல் கட்சி உறுதி செய்யும் என்றும் இந்தியர்களின் இடம் எப்போதும் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி சார்பில், 9 இந்தியர்கள் இடம்பெற்றனர் என்றும், நாட்டில் இந்தியர்களின் சதவிகிதத்தைக் காட்டிலும் இது கூடுதலாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த எதிர்கட்சி கருத்துக்கு மனிதவள அமைச்சர் விளக்கம்.!

மேலும், நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் குழுத்தொகுதி முறை உள்ளது என்றும், மக்கள் செயல் கட்சி எந்த வகையில் இந்தியர்களைப் பாதுகாக்கும் என்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், புதிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதே எங்களது கொள்கை. பிரதமரும் அவ்வாறே எண்ணம்கொண்டுள்ளார் என்றும் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.