Ngee Ann City மாலில் உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்த நபர் மரணம்.!

35-year-old man dies after falling from height at Ngee Ann City mall (PHOTOS: Vernon Lee / Yahoo News Singapore)

Ngee Ann City Mall-ல் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்த 35 வயது நிரம்பிய நபர் மரணம். இந்த சம்பவம் நேற்று (14 ஜூன்) மதியம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மதியம் 2:07pm மணியளவில் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக, தகவல் தெரிவித்த நபர் கூறியுள்ளார்.

எவ்வித அசைவுமின்றி சுயநினைவு இல்லாமல் மயக்கநிலையில் கிடந்த அவரை Tan Tock seng மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாலில் உள்ள கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகையில், நான் கடைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய சத்தத்தை கேட்டேன், உடனே நானும் என்னுடன் வேலை செய்பவரும் உடனே வெளியில் சென்று பார்த்தோம், என்று Mr. Ong Spectacle Hut மேலாளர் இச்சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார்.

Mandarin பேசக்கூடிய ஒருவர் கூறுகையில் “என் கடைக்கு அருகில் ஒரு பெரிய சத்தம் கேட்டது, வெளியில் சென்று பார்த்தபோது 30 வயது நிரம்ப பெற்ற ஒருவர் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடனே அங்கு கூட்டம் கூடிவிட்டது” என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.