சிங்கப்பூரில் Omicron துணை வகையான BA.2.75 ரக கிருமிவகை இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
வியாழன் (ஜூலை 14) நிலவரப்படி, வெளிநாட்டில் இருந்து வந்த அந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது வாகனத்தை விட்டு ஏற்றியதாக ஆடவர் மீது புகார்
அவர்கள் இருவரும் சமீபத்தில் தான் இந்தியாவிற்கு பயணம் செய்ததாகவும், அவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு உடனடியாக சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும் MOH கூறியுள்ளது.
பின்னர், அவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சகம் கூறியது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!