சிங்கப்பூரில் சுமார் 44,000 வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி சிம் கார்டு அட்டையில் $10 நிரப்பப்பட்டது.
இஸ்லாமியர்களின் புனித தினமான நோன்புப் பெருநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இத்திட்டத்துக்கான பெரும்பாலான நிதியாதரவை ஃபேஸ்புக் சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் ஆகியவை வழங்கின என்று TWC2 அமைப்பு கூறியுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 373 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!
TWC2 எனும் வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பு, இம்மாதம் 1ஆம் தேதியன்று தங்களது M1, சிங்டெல், ஸ்டார்ஹப் சிம் கார்டு கட்டண அட்டையில் பணம் இல்லாதவர்களின் கட்டண அட்டைகளுக்கு $10 தானியக்க முறையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை பணம் நிரப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 10,000 பணம் நிரப்பும் கட்டண அட்டைகள் (physical top-up cards) கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி கட்டண அட்டையில் பணம் நிரப்ப உதவ ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து இது வரை TWC2 அமைப்பின் திட்டம் வழி $1 மில்லியன் செலவிடப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வியக்கம் இதுவரை 90,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியுள்ளது என்று தெரிவித்த TWC2 அமைப்பு, சிங்கப்பூரில் பணியாற்றும் கட்டுமான ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
“அரசு சார்பற்ற எங்களைப் போன்ற சிறிய அமைப்பால் இதுபோன்ற பெரிய திட்டங்களை எங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பல அமைப்புகளின் உதவியின்றி செய்திருக்க முடியாது,” என்று TWC2 அமைப்பின் தலைவர் திருவாட்டி டெபி ஃபோர்டிஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் பணிநீக்கத்திற்கு ஆளான 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளில் இணைந்தனர்..!