சோவா சூ காங்கில் கடும் விபத்து: 28 வயது ஆடவர் பலி – போதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது

சோவா சூ காங் அவென்யூ 1ல் நேற்று முன்தினம் செப். 27 ஆம் தேதி கார் விபத்துக்குள்ளானதில் 28 வயது ஆடவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து அன்று இரவு 11.23 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பியுங்கள் – சிங்கப்பூர் அவரச அறிவிப்பு

மின்-பைக்யை (PAB) ஓட்டிச் சென்ற ஆடவர் இந்த விபத்தில் சிக்கினார், அதன் பின்னர் அவர் மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.

மது அருந்தி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 32 முதல் 36 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் இரண்டு ஆண்கள் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நபர்களை இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

செம்பவாங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி